corona vaccination 87687
செய்திகள்உலகம்

வெவ்வேறு தடுப்பூசிகள் – அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி!

Share

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு அஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய இரு தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டன.

குறித்த ஆய்வு அசர்பைஜான் நாட்டில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் நடாத்தப்பட்டது.

இதற்காக 100 தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

கடந்த பெப்ரவரி மாதம் இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.

முதலில், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

இவ் ஆய்வில் முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக்கப்பட்டன.

ஆய்வின் 57-வது நாளில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேருக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தது.

இதே போன்ற ஆய்வுகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் நடாத்தப்பட்டு வருகின்றது.

அஸ்ட்ராஜெனகா மற்றும் பைஸர் ஆகிய இரு தடுப்பூசிகளை பயன்படுத்தி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...