88
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர், மொடோர்னா

Share

உயர்கல்வியை மேற்கொள்ள வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தடுப்பூசிகளை பெற வேண்டுமாயின் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் ஏற்றப்படமாட்டாது.

நாராஹேன்பிட்டி மருத்துவமனையில் மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என வெளியாகிய தகவலை அடுத்து அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டனர்.

எனினும் உள்நாட்டு மாணவர்களுக்கு செலுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டபோது அங்கு மாணவர்கள் அமைதியின்மையை தோற்றுவித்தனர்.

இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...