88
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர், மொடோர்னா

Share

உயர்கல்வியை மேற்கொள்ள வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தடுப்பூசிகளை பெற வேண்டுமாயின் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் ஏற்றப்படமாட்டாது.

நாராஹேன்பிட்டி மருத்துவமனையில் மொடோர்னா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என வெளியாகிய தகவலை அடுத்து அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் திரண்டனர்.

எனினும் உள்நாட்டு மாணவர்களுக்கு செலுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டபோது அங்கு மாணவர்கள் அமைதியின்மையை தோற்றுவித்தனர்.

இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...