tamilni 83 scaled
இந்தியாசெய்திகள்

தீவிர வறுமையை ஒழித்த இந்தியா: பொருளாதார வல்லுநர்கள் தகவல்

Share

தீவிர வறுமையை ஒழித்த இந்தியா: பொருளாதார வல்லுநர்கள் தகவல்

இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அமெரிக்காவின் சிந்தனைக்குழு ஒன்றின் பொருளாதார வல்லுநர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

சுர்ஜித் பல்லா மற்றும் கரண் பாசின் ஆகிய இரு பொருளாதார வல்லுநர்கள் இணைந்து, 2022 – 2023ஆம் ஆண்டிற்கான நுகர்வு செலவினத் தரவை மேற்கோள்காட்டியே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய, இந்தியாவின் நிகர தனிநபர் நுகர்வானது, 2011 – 2012ஆம் ஆண்டில் இருந்து, ஆண்டுக்கு 2.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், கிராமப்புற வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சியை விட 3.1 சதவீதம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமத்துவமின்மையில் முன்னெப்போதும் இல்லாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிக வளர்ச்சி மற்றும் சமத்துவமின்மையே இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் பிரதான பங்காற்றியுள்ளது என்றும் குறித்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் தொகையின் விகிதாசாரம், 2011 – 2012ஆம் ஆண்டில் 12.2 சதவீதத்திலிருந்து 2022 – 2023ஆம் ஆண்டில் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும், சர்வதேச ஒப்பீடுகளில் பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளபடி, இந்தியா தீவிர வறுமையை ஒழித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...