sri lanka parliament 0 1200x550rrrr scaled
இலங்கைசெய்திகள்

அபராதத் தொகை அதிகரிப்பு! – வெளியாகியது வர்த்தமானி

Share

நுகர்வோர் விவகார அதிகார சபையால் சில பொருள்களுக்கான நிர்ணய விலை குறிப்பிட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய தனிநபர் வியாபாரங்களுக்காக இதுவரை விதிக்கப்பட்ட 1000 ரூபா அபராதம் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபா அபராதம் ஐந்து லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் இரண்டாவது தடவை அதிகூடிய விலைக்கு பொருள்கள் விற்பனை செய்தால் 2000 ரூபா தண்டப்பணத்துக்காக 20 ஆயிரம் ரூபாவும் 2 லட்சம் ரூபாவுக்கு 10 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

நிறுவனம் ஒன்றில் இந்தத் தவறு இழைக்கப்படுமாயின் 100 ரூபா தண்டப்பணம் ஒரு லட்சம் ரூபாவாகவும் ஐந்து லட்சமாக நிலவிய அபராதம் 50 லட்சமாகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படும்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்டம் திருத்தமின்றி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமையை அடுத்து இந்த அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...