old man
செய்திகள்இலங்கை

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்!

Share

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம்!

காங்கேசன்துறை பகுதியில் வீடொன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் காணப்படும் வீட்டில் தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் கடந்த சில தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைத் தொடர்ந்து அயலவர்கள் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சடலம் பொஸிசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் சில நாள்களுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். இதன் காரணமாகவே சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...