கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி
இலங்கைசெய்திகள்

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு?

Share

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு?

ஹெரலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசுடன்ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் இயற்கை திரவ வாயு முனையம் நிர்மாணித்தல் மற்றும் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வரை குழாய் கட்டமைப்பை அமைத்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன என அமெரிக்க நிறுவனம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் ஏற்கனவே 310 மெகாவோட் கொள்ளளவை கொண்டிருக்கின்றது.

2023 ஆம் ஆண்டளவில் மேலதிகமாக 700 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அந் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் விரைவில் மின்சக்தி அமைச்சர் நாடாளுமன்றில் அறிவிப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...