tamilni 146 scaled
இலங்கைசெய்திகள்

இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான கொடுப்பனவு

Share

வைத்தியர்களுக்கான இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி கொடுப்பனவு 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த கொடுப்பனவு 35,000 ஆக இருந்தது.

அத்துடன் பல்கலைக்கழக ஆசிரியர்களின் படிப்புக்கான கொடுப்பனவிலும்; 25 வீத அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு அவர்களின் ஜனவரி மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவிருந்த 10 ஆயிரம் ரூபாய் வாழ்க்கை செலவு கொடுப்பனவில் 5000 ரூபாய் ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 215
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு: குற்றப் பிரமுகரின் சகோதரர் உயிர் தப்பினார்!

அஹுங்கல்லா பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘லோக்கு பட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பட்டி’...

world 217
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறை முடிந்து கொழும்பு திரும்புவோருக்காக விசேட இரயில் சேவைகள் அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தனது சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும்...