tamilni 146 scaled
இலங்கைசெய்திகள்

இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான கொடுப்பனவு

Share

வைத்தியர்களுக்கான இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி கொடுப்பனவு 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த கொடுப்பனவு 35,000 ஆக இருந்தது.

அத்துடன் பல்கலைக்கழக ஆசிரியர்களின் படிப்புக்கான கொடுப்பனவிலும்; 25 வீத அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு அவர்களின் ஜனவரி மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவிருந்த 10 ஆயிரம் ரூபாய் வாழ்க்கை செலவு கொடுப்பனவில் 5000 ரூபாய் ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...