tamilnih 50 scaled
இலங்கைசெய்திகள்

காசாவில் பசியால் அவதியுறும் சிறுவர்கள்

Share

காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பசி மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

நிதியத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, காசா பகுதியில் 2 வயதுக்குட்பட்ட 90% குழந்தைகளுக்கு சரியான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த போதுமான உணவு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இடம்பெற்றுவரும் யுத்த மோதல்களினால் அப்பகுதி சிறுவர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேல் மற்றும் மோதல் காரணமாக காசா பகுதியில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

காசாவில் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்றுவரும் போரில் தற்போதைய நிலவரப்படி இறந்தவர்களில் 5,300 பெண்களும் 9,000 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...