court hammer
செய்திகள்இலங்கை

வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு! – மன்னாரில் சம்பவம்!

Share

மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக விலைக்கு விற்றமை மற்றும் காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகரப் பகுதி மக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து நேற்றையதினம் சாந்திபுரம், தாராபுரம் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, பெரியகமம் பகுதியில் அனுமதி பத்திரமின்றி சிமெந்து மூடைகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...