tamilni 242 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் அடுத்த ஆண்டு கடும் வரட்சி

Share

நாட்டில் அடுத்த ஆண்டு கடும் வரட்சி

எதிர்வரும் பெப்ரவரி மற்றும் அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்கு இடையில் கடுமையான வரட்சி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் இன்னல்களை எதிர்கொள்ளும் தற்போதைய நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட விஞ்ஞான அமர்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த நிலையை நிவர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் இந்த நிகழ்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நுண்ணூட்டச் சத்து இடைவெளி அதிகரித்து வருவதாகவும் நிகழ்வில் உரையாற்றிய நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 166
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை நிறைவு: இன்று முதல் அரச அலுவலகங்கள் வழமைக்குத் திரும்பின!

சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, அனைத்து அரச அலுவலகங்களும் இன்று (ஏப்ரல் 15) முதல் மீண்டும்...

world 165
செய்திகள்உலகம்

அந்தமான் கடலில் ஏதிலிகள் படகு கவிழ்ந்து விபத்து: நடுக்கடலில் தவித்த 9 பேர் மீட்பு!

மியான்மரில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பி, மலேசியா நோக்கி ஆபத்தான கடல் பயணத்தை...

world 164
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானின் இராஜதந்திர நகர்வுகள் தீவிரம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணித்து, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில்...

world 163
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக...