tamilni 243 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அதிகாரியினால் செய்யப்பட்ட விருந்தில் கடும் மோதல்

Share

பொலிஸ் அதிகாரியினால் செய்யப்பட்ட விருந்தில் கடும் மோதல்

கொழும்பின் புறநகர் பகுதியான கொஸ்வத்த பிரதேசத்தில் மதுபான விருந்து ஒன்றின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த 13ஆம் திகதி ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொஸ்வத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மதுபான விருந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை மேலும் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...