uni
செய்திகள்இலங்கை

ஊடக உயர் டிப்ளோமா கற்கைநெறி – யாழ்.பல்கலையில் ஆரம்பம்

Share

யாழ்.பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவால் கடந்த வெள்ளிக்கிழமை இக் கற்கைநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகக் கற்கைகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு வருட பகுதி நேர கற்கையாக ஆரம்பிக்கப்படும் இந்த கற்கைநெறி துறையார் விரிவுரையாளர்கள், மூத்த ஊடகவியலாளர் மற்றும் ஊடக ஆய்வாளர்கள் ஆகியோரால் சுயநிதிக் கற்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...

Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...