rtjy 6 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை : பிரதமர் வலியுறுத்து

Share

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை : பிரதமர் வலியுறுத்து

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் நிலையியற் கட்டளை சட்டம் தொடர்பில் கேள்விகளை எழுப்பும்போது அதனை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து சபாநாயகர் உரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (01.12.2023) எதிர்க்கட்சித் தலைவர் நிலையியற் கட்டளை சட்டம் தொடர்பில் கேள்விகளை எழுப்பிய போது குறித்த கேள்விக்கு மேலதிகமாக மேலும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதன் போது “எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய எந்த கேள்விக்கு பதில் கூற வேண்டும்?” என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர சபாநாயகரிடம் வினவினார்.

இந்நிலையில், சபையில் ஏற்பட்ட சர்ச்சையின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

“நிலையியற் கட்டளை சட்டம் தொடர்பில்(27/2) கேள்விகளை எழுப்பும் போது அதற்கு மேலதிகமான கேள்வியையும் எழுப்ப முடியுமா?

அது தொடர்பில் உத்தரவொன்றை சபாநாயகர் பிறப்பிக்க வேண்டும், நாளை முதல் அது நடைமுறைக்கு வர வேண்டும்.

சபாநாயகருக்கோ அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கோ தேவையான விதத்தில் நிலையியற் கட்டளையை துஸ்பிரயோகம் செய்ய முடியுமானாலும் ஆளும் கட்சி அவ்வாறு செயற்படாது.

நாடாளுமன்றத்திலிருந்து விலகிச் செல்லும் தினத்திலும் குறித்த நிலையியற் கட்டளை எதிர்காலத்திற்காக பாதுகாத்து வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...

Retirement
இலங்கை

ஓய்வு வயது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

  ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதோடு,...