lohan
இலங்கைசெய்திகள்

லொஹான் விவகாரம் – சி.ஐ.டி விசாரணை!

Share

லொஹான் விவகாரம் – சி.ஐ.டி விசாரணை!

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அண்மையில் சென்ற லொஹான் ரத்வத்த, சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். – எனத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறித்த பதவியில் இருந்து மட்டுமே விலகினார். ஆயினும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சராக இன்னமும் நீடிக்கிறார்.

இந்த நிலையில்,லொஹான் ரத்வத்த மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் உட்பட அரசியல்கள் கட்சிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலதரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...