Black fungus Mucormycosis symptoms and side 555
செய்திகள்இலங்கை

சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!!

Share

சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!!

இலங்கையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என விசேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாத் தொற்றாளர்களில் இதுவரை சிறுவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் எவையும் இல்லை. எனினும் சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இதன் அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கறுப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டால் முதலில் முகம் வீங்கும், காய்ச்சல் , தலைவலி, மூக்கின் உட்புறத்தில் கறுப்பு நிறத்தில் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே இவற்றை கவனிக்காது விட்டால் கண்கள் பாதிக்கும். கண்களைப் பாதித்தால் கண்பார்வை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட நேரிலும்.

எதுவித சிகிச்சையளித்தாலும் இழந்த பார்வையை மீள பெற முடியாது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அறிகுறிகள் சிறுவர்களிடையே தென்பட்டால் உடனடியான வைத்தியசாலை அழைத்துச் செல்லுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...