Black fungus Mucormycosis symptoms and side 555
செய்திகள்இலங்கை

சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!!

Share

சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!!

இலங்கையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என விசேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாத் தொற்றாளர்களில் இதுவரை சிறுவர்களுக்கு கறுப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் எவையும் இல்லை. எனினும் சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இதன் அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கறுப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டால் முதலில் முகம் வீங்கும், காய்ச்சல் , தலைவலி, மூக்கின் உட்புறத்தில் கறுப்பு நிறத்தில் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே இவற்றை கவனிக்காது விட்டால் கண்கள் பாதிக்கும். கண்களைப் பாதித்தால் கண்பார்வை இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட நேரிலும்.

எதுவித சிகிச்சையளித்தாலும் இழந்த பார்வையை மீள பெற முடியாது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அறிகுறிகள் சிறுவர்களிடையே தென்பட்டால் உடனடியான வைத்தியசாலை அழைத்துச் செல்லுங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...