tamilnig 1 scaled
இலங்கைசெய்திகள்

உட்கட்சிப் பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தக் கூடாது : நாமல்

Share

உட்கட்சிப் பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தக் கூடாது : நாமல்

கிரிக்கெட் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கே பாதிப்பு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நிர்வாக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் நிர்வாக பிரச்சினையால் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது.

இவ்வாறு இடைநிறுத்தப்படுவதனால் வருடாந்தம் கிடைக்கப்பெறும் நூறு மில்லியன் டொலர் நேரடி மற்றும் மறைமுக வருமானத்தை இழக்க நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அரசாங்கத்தின் உட்கட்சிப்பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தி தீர்வு காண முயற்சிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...