tamilni 122 scaled
இலங்கைசெய்திகள்

பட்டதாரி காதலியை கொலை செய்த காதலன் : சகோதரி வெளியிட்ட தகவல்

Share

பட்டதாரி காதலியை கொலை செய்த காதலன் : சகோதரி வெளியிட்ட தகவல்

ஹோமாகம நீதிமன்ற வீதியில் உள்ள வாடகை அறையில் நேற்று கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் காதலன் என கூறப்படும் இளைஞனும் அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விவசாய அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தரான அச்சினி துஷார விஜேதுங்க என்ற 31 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

“என் சகோதரி வழக்கமாக தினமும் 6மணிக்கு வீட்டிற்கு வருவார். அன்று வெகுநேரமாகிவிட்டதால், எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தோம். அதிகாலையில் நாகொட பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.

எனது தங்கையுடன் பழகிய இளைஞன் மாத்திரைகளை உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினார்கள்.

நாங்கள் முச்சக்கர வண்டியில் நாகொடைக்குச் சென்றோம். அங்கு இளைஞனின் தாயார் இருந்தார். உங்கள் தங்கையின் கழுத்தை அறுத்து விட்டேன். நீங்கள் சென்றால் காப்பாற்ற முடியும் என என்னுடைய தங்கையின் காதலன் கூறியிருந்தார்.

நாங்கள் விரைவில் ஹோமாகமவில் உள்ள தங்கையின் தங்கும் விடுதிக்கு வந்து பார்த்தோம், தங்கை முதல் நாள் இரவு படுகொலை செய்யப்பட்டதை அறிந்தோம். என் தங்கைக்கு ஏன் இப்படி நடந்தது? தங்கைக்கு என்ன நடந்தது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது” என ஹோமாகம பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய உயிரிழந்த பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார்.

எங்கள் குடும்பத்தில் நானும் என் தங்கையும் மட்டுமே. தங்கை தொழிலுக்கு போக ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது. அங்கு அந்த இளைஞனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அவர் எனது தங்கை பணியாற்றிய இடத்திலும் பணியாற்றியுள்ளார்.

அந்த உறவுக்கு சுமார் நான்கு மாதங்கள். தங்கை இதைப் பற்றி எங்களிடம் குறிப்பிட்டிருந்தார். நான் இப்போது அம்மா அப்பாவிடம் என்ன சொல்லப் போகிறேன்? என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், விவசாய அமைச்சில் பணிபுரியும் 32 வயதுடைய பட்டதாரி என ஹோமாகம தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1685686384 NBRO warns of landslide risks in several areas L
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய...

suryakumar salman agha 1200 1760670009
செய்திகள்உலகம்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல் பாகிஸ்தான்...

23 652cc44949045
செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியை காதலிக்கவில்லை: நாமல் ராஜபக்ச திட்டவட்டம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியைத் தான் காதலிக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன...

25 68f24a1996c31
இலங்கைசெய்திகள்

வடக்கு மாகாண இடமாற்றச் சபை விவகாரம்: ஆளுநர் அறிக்கை தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு தெளிவுபடுத்தல் அறிக்கையை...