tamilni 123 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்

Share

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஜனநாயகத்திற்கும் சரியான நேரத்தில் தேர்தல்கள் முக்கியம். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் என்பனவும் நடைபெறுமென அமெரிக்கா நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவை அனைத்தும் மக்களுக்கு குரல் கொடுக்கின்றன, வாக்குப்பெட்டியின் மூலம் தங்கள் கருத்தைக் கூற முடியும் மற்றும் அவர்களின் தலைமையைத் தேர்ந்தெடுக்க முடியும் என அமெரிக்க தூதுவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த வருடமும் அதற்குப் பின்னரும் தேர்தல்கள் திட்டமிடப்பட்டிருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

அத்துடன் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைக் காண அமெரிக்கா ஆவலுடன் காத்திருக்கிறது என்றும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...