tamilni 108 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மக்களுக்கு உரை

Share

ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மக்களுக்கு உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க ஆகியோர் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரைகளை ஆற்ற உள்ளனர்.

ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தேர்தல் முறை மாற்றம், தேசிய தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தேர்தல் முறை ஒன்றின் அடிப்படையில் தேசிய தேர்தல்களை நடத்த முடியுமா என கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை நாட்டின் கிரிக்கெட் துறையில் நிலவிவரும் நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்தி இடைக்கால குழு ஒன்றை நியமித்தமை தொடர்பில் அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

மண்டையோடுகளின்றி காணப்பட்ட என்பு தொகுதிகள் – செம்மணியில் அவலம்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 13 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,...

Histopathological examination
இலங்கை

மரணத்தில் சந்தேகம் – விசாரணை செய்ய கோரும் தந்தை.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 21 வயதுடைய யுவதியின் மரணத்தில்...

chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...