tamilni 71 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு…!

Share

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு…!

கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வரும்நிலையில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று (6.11.2023) காலை ஆர்ப்பாட்டம் நடத்திய குழு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளிடம் மனுவொன்றை கையளித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பின்புலத்திலேயே கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிவிசேட வர்த்தமானி ஒன்றினூடாக இலங்கை கிரிக்கெட் சபையை கலைத்து புதிய நிர்வாக இடைக்கால குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் அமைத்துள்ள சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கடும் விசனத்தில் உள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு எந்தவித முன்னறிவித்தல்களும் செய்யப்படாததால் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் கடும் விசனமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

எவ்வாறாயினும் அமைச்சரின் உத்தரவை மீளப்பெறுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டால் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பில் இருந்து ரொஷான் பதவி விலகக் கூடுமென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை அணி பங்குபற்றிய போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் இலங்கை அணி மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...