pi
இலங்கைசெய்திகள்

சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்!

Share

சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்!

நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி மாத்திரமே ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றமையைத் தொடர்ந்து நாட்டில் 15–19 வயதுக்கிடைப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசியை மாத்திரம் ஏற்றுமாறு ஜனாதிபதியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த வயதெல்லையில் உள்ள அனைத்து சிறார்களுக்கும் மருத்துவமனைகளில் மாத்திரம் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 12–19 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குமாறு விசேட சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...