Privete Bus 567657 scaled
இலங்கைசெய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்!

Share

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து தொழில்துறைக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அடுத்த வாரம் முதல் நிவாரணப்பொதிகள் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது.

பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பேருந்து சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக 17 ஆயிரம் பஸ்களுக்கான உதிரிப்பாகங்கள் பெற்றுக்கொள்ள வவுச்சர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பஸ்களை சேவைக்கு ஈடுபடுத்த முன்னர் டயர் மற்றும் காப்புறுதி உள்ளிட்ட தேவைகளுக்காக நிவாரணம் வழங்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...