tamilni 251 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் நாடு திரும்பியதும் உயர்மட்டத்தில் அதிரடி மாற்றம்!

Share

ரணில் நாடு திரும்பியதும் உயர்மட்டத்தில் அதிரடி மாற்றம்!

சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் அமைச்சரவையிலும், பாதுகாப்பு அணிகள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்டத்திலும் அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம் கட்டாயம் இடம்பெறும் என்றும், இதன்போது தற்போதைய சுகாதார அமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சரும் மாற்றப்படலாம் என்றும் அறியமுடிகின்றது.

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மூன்று வார கால பதவி நீடிப்பு இந்த மாத இறுதியில் முடிவடைகின்ற நிலையில், புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனின் பெயர் அரசமைப்புச் சபைக்கு சிபாரிசு செய்யப்பட்டு அவருக்கு பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவருகின்றது.

தேசபந்து தென்னக்கோனுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆதரவு அளித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சொந்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிக்கின்றது.

கட்சியை மீண்டும் ஒன்றிணைத்து வலுப்படுத்துவதற்காக சிரேஷ்ட உறுப்பினர்கள் அனைவரும் நவம்பர் மாதத்துக்கு பின்னர் கிராம மட்டத்திலிருந்து பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் பரந்த கூட்டணியின் கீழ் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...