அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு இயக்குனர் லிங்குசாமி அளித்த பேட்டியில் பல கலகலப்பான விடயங்களினை பேசியுள்ளார், தான் விஜய்க்கு கதை சொன்னபோது நடந்த சம்பவம் பற்றியும் விவரித்து இருக்கிறார்.
ரன், சண்டக்கோழி ஆகிய படத்தின் கதைகளை முதலில் விஜய்யிடம் தான் கூறியுள்ளார் அவர். ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் வேறு ஹீரோ வைத்து எடுத்ததாக லிங்குசாமி கூறி இருக்கிறார்.
ரன் பட கதை கேட்டுவிட்டு, அந்த மாதிரி கதை இப்போது விஜய்க்கு வேண்டாம் என கூறினாராம். அதை தொடர்ந்து சண்டக்கோழி படத்தின் கதையை விஜய்யே கேட்டாராம்.
பாதி கதையை கேட்டுவிட்டு, இரண்டாம் பாதி கதை கேட்காமலேயே வேண்டாம் என சொல்லிவிட்டாராம். ராஜ்கிரண் ரோல் வந்த பிறகு தனக்கு அது செட் ஆகாது என கூறி விட்டாராம் அவர்.
ஆனால் படம் வெளியாகி வெற்றி அடைந்த பிறகு ஒரு நிகழ்வில் விஜய் லிங்குசாமியை சந்தித்தாராம். படம் சிறப்பாக இருந்ததாக வாழ்த்து கூறினாராம். ‘நீங்க தான் மீதி பாதி கதையை கேட்கவே இல்லையே‘ என அந்த நேரத்தில் காட்டமாக பதில் சொன்னாராம் லிங்குசாமி.