tamilni 375 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

குவைத்தில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு பொது மன்னிப்பு

Share

குவைத்தில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு பொது மன்னிப்பு

குவைத் நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொது மன்னிப்பு அமுலுக்கு வருகிறது.

பொது மன்னிப்பு காலம் மார்ச் 17 முதல் ஜூன் 17 வரை என மூன்று மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது அபராதம் செலுத்தி ஆவணங்களை சட்டப்பூர்வமாக்கவோ வாய்ப்பளிக்கும் வகையில் இந்த பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான Sheikh Fahad Yousef Al Sabah இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இந்த முடிவு இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு நிம்மதியாக இருக்கும்.

இதன் மூலம் குவைத்தில் சரியான ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியும்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஊடக பொதுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் தற்போது 1,10,000 சட்ட விரோதமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு காட்டுகிறது.

அவ்வாறு சட்ட விரோதமாக இருப்பவர்கள் இந்த பொது மன்னிப்பைப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவர்களின் விசாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொது மன்னிப்புக் காலத்தில், சட்டவிரோதமாக குடியிருப்போர் அபராதம் அல்லது தண்டனை இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம். அப்படிப்பட்டவர்கள் வேறு வேலை விசாவில் மீண்டும் குவைத்துக்கு வரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டில் தங்க விரும்புவோர் அபராதம் செலுத்துவதன் மூலம் தங்கள் விசா ஆவணங்களை சரிபார்க்கலாம். அதிகபட்ச அபராதம் 600 தினார் வரை இருக்கும்.

நிதி வழக்குகளில் பயணத் தடையை எதிர்கொள்பவர்கள், அந்த வழக்கு தீர்க்கப்பட்ட பின்னரே நாட்டை விட்டு வெளியேற முடியும்.

இதற்கு முன்னதாக குவைத்தில் பொது மன்னிப்பு ஏப்ரல் 2020-இல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...