4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

Share

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து பணியாற்றவும் தயார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழ் அரசுக் கட்சியின் தலமைத்துவம் தந்தை செல்வாவின் கொள்கையுடன் பயணிக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கும் இணைந்து செயலாற்றவும் நாம் தயார்.

தமிழ் அரசுக் கட்சியை நாம் ஒரு போதும் அழிக்க நினைத்ததில்லை.

குறிப்பாக தமிழரசுக்கட்சியை பொருத்தவரை தலைவர் செயலாளர் பதவிகள் கேள்விக்குறியாக உள்ளது.

ஆனால் நாடாளுமன்ற குழு தலைவர் பதவி மாத்திரம் உறுதியான ஒன்றாக காணப்படுகின்றது.

மேலும், தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமைப்பற்றி தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரனுடன் பேசும் போது அதற்கான தீர்வை பெறமுடியும் என்ற நம்பிக்கை வெளிப்படவில்லை.

குறிப்பாக தமிழ் தேசியத்தில் இருந்துக்கொண்டு அதனை எதிர்க்கும் பலர் இந்த மண்ணில் உள்ளனர்.

இதன் காரணமாகவே தமிழ் தேசிய கட்சிகள் அணைத்தையும் ஒன்று சேர்க்கும் பொது நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...