இலங்கைஏனையவைசெய்திகள்

முல்லைத்தீவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிபொருட்கள்

Share

முல்லைத்தீவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிபொருட்கள்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் இன்று(10.07.2023) மீட்க்கப்பட்டுள்ளன.

இதன்போது பெரிய பரா-13, சின்ன பரா – 01, 82MM, மோட்டார் – 49, 60MM, மோட்டார் – 01, ஆர் வி ஜி – 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல தொகை வெடிபொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பெருமளவில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியதாக அறியமுடிகின்றது.

மேலும் கடந்த வியாழக்கிழமை(06.07.2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள், இராணுவrத்திடம் சரணடைந்த பெண் போராளிகளுடையதா? அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளினுடையாதா, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...

9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...