17 13
இலங்கைஏனையவைசெய்திகள்

அசாத் சாலி கைது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Share

அசாத் சாலி கைது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு நட்ட ஈடாக 75,000 ரூபா பணத்தை பிரதிவாதிகள் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் இன்று (12.12.2024) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகள் ஆவர்.

2021 மார்ச் 9 அன்று செய்தியாளர் சந்திப்பில் மதங்களுக்கு இடையே முருகலை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அசாத் சாலி 2021 மார்ச் 16 அன்று கைது செய்யப்பட்டார்.

ஒன்பது மாதங்களின் பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் 2021 டிசம்பர் 2 அன்று அவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...