‘குக் வித் கோமாளி சீசன் 4': டைட்டில் வின்னர் இவர் தான்!!
ஏனையவை

‘குக் வித் கோமாளி சீசன் 4′: டைட்டில் வின்னர் இவர் தான்!!

Share

‘குக் வித் கோமாளி சீசன் 4′: டைட்டில் வின்னர் இவர் தான்!!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது முதல் மக்களின் விருப்பமான நிகழ்ச்சியாக இருக்கும் இதன் நான்காவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 10 பிரபல நட்சத்திரங்களுடன் தொடங்கப்பட்டது இந்நிகழ்ச்சி. பல கடினமான சுற்றுகளுக்குப் பிறகு ஸ்ருஷ்டி, மைம் கோபி, ஷிவாங்கி, கிரண், விசித்ரா, ஆண்ட்ரியன் ஆகிய 6 ஜோடிகள் இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் கோமாளிகள், புகழ், மோனிஷா, குரேஷி, சுனிதா, ஜி.பி.முத்து, சில்மிஷம் சிவா துணையுடன் போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.

நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட்இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை ரக்‌ஷன் தொகுத்து வழங்குகிறார்.

சிவாங்கி விஜய் டிவிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், இவரே இந்த முறை டைட்டில் பட்டதை கைப்பற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், டைட்டில் வின்னராக மைம் கோபி வின்னராக தெரிவாகியுள்ளார். இரண்டாவதாக சிருஷ்டி, மூன்றாம் இடத்தை சிவாங்கி பெற்றுள்ளனர்.

டைட்டில் வின்னராக மைம் கோபி தனக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ( இந்திய மதிப்பில்) பணத் தொகையை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளமை அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...