24 65a26468b6aa5
ஏனையவை

112 வயதில் 8வது திருமணத்திற்கு தயாராகும் மூதாட்டி: திகைப்பில் மூழ்கும் இளைஞர்கள்

Share

112 வயதான சிட்டி ஹவா என்ற மூதாட்டி 8 முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிட்டி ஹவா(Siti Hawa) என்ற 112 வயது மூதாட்டி மலேசியாவின் தும்பட்(Tumpat) பகுதியில் வாழ்ந்து வருகிறார்.

சிட்டி ஹவா இதற்கு முன்னதாக 7 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார், அதில் சில கணவர்கள் தற்போது உயிரிழந்தும் விட்டனர்.

மற்ற கணவர்கள் சிட்டி ஹவாவிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டுவிட்டனர். இவருக்கு 5 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள் மற்றும் 30 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தன்னை யாராவது திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு Propose செய்தால் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக 112 மூதாட்டி சிட்டி ஹவா தெரிவித்துள்ளார்.

அதாவது தன்னுடைய 8வது திருமணத்திற்கு தயார் என்று பாட்டி தெரிவித்துள்ளார், மேலும் தனக்கு சின்னதாய் பார்வை குறைபாடு மட்டும் இருப்பதாகவும் ஆனால் தினசரி வேலைகளை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது 58 வயதாகும் அவரது இளைய மகனுடன் சிட்டி ஹவா வாழ்ந்து வருகிறார், இவரது நீண்ட கால ஆயுளுக்கு எந்தவொரு ரசியமும் இல்லை என்றும் வெள்ளை அரிசியும், தண்ணீரும் மட்டுமே உபயோகிப்பதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...