IMG 20220401 WA0036
ஏனையவை

‘அரபு வசந்தம்’ சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை! – போராட்டக்காரரே பயன்படுத்தினர் என்கிறார் பிரசன்ன

Share

‘அரபு வசந்தம்’ என்ற சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை. போராட்டக்காரர்கள்தான் பயன்படுத்தினர். அதனையே அரசு சுட்டிக்காட்டியுள்ளது – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள்வர ஆரம்பித்துள்ளனர். எனவே, பிரச்சினைகள் விரைவில் தீர்ந்துவிடும். இந்நிலைமை ஏற்பட்டால் எதிரணிகளால் அரசியல் செய்ய முடியாது. எனவேதான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். ஜே.வி.பியின் தேசியப்பட்டியலில் இருந்த உறுப்பினர் ஒருவரும் போராட்டத்துக்கு வந்துள்ளார்.

அமைதியான நடைபெற்றுள்ள போராட்டத்தை அடிப்படைவாதிகள் கையில் எடுத்துள்ளனர். எனினும், ஜனாதிபதி பொறுமை காத்தார். மக்கள் எதிர்ப்பை வெளியிட இடமளித்தார்.

எனினும், அடிப்படைவாதிகள் குழப்பியுள்ளனர். இராணுவத்தினர் தீ வைக்கவில்லை. போராட்டத்தில் இருந்தவர்களே வைத்துள்ளனர், அதற்கான ஆதார படங்கள் உள்ளன.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...