world 113
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலையில் சோகம்: சம்பூர் கடலில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!

Share

திருகோணமலை, சம்பூர் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ‘பவுல் பொயிண்ட்’ (Foul Point) என அழைக்கப்படும் சம்பூர் வெளிச்சவீட்டு கடற்பரப்பில் நீராடச் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சோகமான சம்பவம் இன்று (ஏப்ரல் 12, 2026) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். அப்லல் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இன்று மாலை தனது நண்பர்களுடன் இணைந்து குறித்த கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் அலையினால் அவர் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார்.

இளைஞர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட அவரது நண்பர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அபயக்குரல் எழுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் பலனாக அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சம்பூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பண்டிகைக் காலங்களில் நீர்நிலைகளில் நீராடச் செல்வோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...