WhatsApp Image 2021 10 13 at 12.37.30 PM
செய்திகள்இலங்கை

அரசியலுக்கு வருவாரா ‘மெனிக்கே’ புகழ் பாடகி?

Share

“அரசியலுக்கு வரும் எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் இசைக்கலைஞர். அத்துறையில் பயணிக்கவே விரும்புகின்றேன்.” – என்று இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா தெரிவித்தார்.

இந்தியாவுக்கு இசைப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த அவர் இன்று நாடு திரும்பினார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நீங்கள் அரசிலுக்கு வருவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, இல்லை என அவர் பதிலளித்தார்.

இலங்கையின் இளம் பாடகி, யொஹானி டி சில்வா பாடிய “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடலானது தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் ‘சூப்பர் ஹிட்’டாகியுள்ளது. இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் அடிக்கடி செவிமடுக்கும் பாடலாகவும் மாறியுள்ளது.

அதேவேளை குறித்த பாடல்மூலம் இலங்கையின் நாமமும் இன்று சர்வதேச மட்டத்தில் உச்சரிக்கப்படுகின்றது. சிங்கள சினிமாத்துறையில் புதியதொரு புரட்சிக்கான அடித்தளத்தையும் இட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...