per xijinping 01 810459054
செய்திகள்உலகம்

மூன்றாவது முறையாகவும் சீனாவின் அதிபராக ஷி ஜின்பிங் !!

Share

மூன்றாவது முறையாகவும் சீனாவின் அதிபராக ஷி ஜின்பிங் பதவி வகிப்பார் என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

சீனவின் அதிபா் ஷி ஜின்பிங் மீண்டும் மூன்றாவது முறையாக அதிபராக பதவியில் தொடர வழிசெய்யும் தீா்மானத்துக்கு சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கடந்த வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகால வரலாற்றில், கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங் மற்றும் அவருக்குப் பிறகு அதிபாரன டெங் ஜியோபிங் ஆகியோர் மூன்று முறை அதிபராக இருந்துள்ளார்கள்.

அதன் பின் தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாகவும் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அக் கட்சியின் மத்திய குழு அனுமதி அளித்துள்ளது.

அதன்மூலம், ஷி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீன அதிபராக தொடருவது உறுதியாகியுள்ளது.

சீன அதிபராக ஷி ஜின்பிங் 2012-இல் பதவியேற்றாா்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங்குக்கு பின், சீனாவின் வலிமையான அதிபராக ஜின்பிங் கருதப்படுகிறாா்.

இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. எனினும் இப்போதுள்ள சா்வதேச சூழ்நிலையில், ஜின்பிங்கே அதிபராக இருப்பது நாட்டுக்கு நல்லது என , சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

சீனாவில் அதிபர் ஒருவா் இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற சட்டத்தை , கடந்த 2018-ஆம் ஆண்டு கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஷி ஜின்பிங் மாற்றியமைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...