images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

Share

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஒரு ஆண் தாதி (Male Nurse) தன்னுடைய பணி காலத்தில், 10 நோயாளிகளை ஊசி போட்டுக் கொலை செய்ததாகவும், 27 பேரைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சிச் சம்பவங்கள் 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது.

இரவு நேரப் பணியின்போது, பணிச் சுமை கூடுதலாக இருக்கிறது என உணர்ந்த அவர், இந்த கொடூர முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை ஆச்சன் நீதிமன்றத்தில் வந்தபோது, குற்றவாளிக்கு 15 ஆண்டுகளுக்குக் குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேன்முறையீடு: எனினும், அவர் மேன்முறையீடு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் பணிகள் நடந்து வருவதால், மீண்டும் அவருக்கு எதிராக விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.

ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூரக் கொலைகாரராக நம்பப்படும் நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் தாதி, 2019ஆம் ஆண்டில், வடக்கு ஜெர்மனியில் இரண்டு மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையில் நோயாளிகளுக்கு அதிக டோஸ் மருந்துகளைக் கொடுத்ததில் பலர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தற்போது இதேபோன்ற மற்றொரு கொடூர வழக்கு தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...