United Nations
உலகம்செய்திகள்

8 பில்லியனை தொடும் உலக மக்கள் தொகை!!

Share

உலக மக்கள்தொகை இவ்வாண்டு நவம்பர் 15ஆம் திகதி எட்டு பில்லியனை தொடும் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் சீனாவை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்று உலக நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

உலக மக்கள் தொகையில் இது ஒரு புதிய மைல்கல் என்று தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் கூறினார்.

பூமியைக் காப்பதில் அனைவருக்கும் பொறுப்பு இருப்பதை நினைக்க வேண்டிய நேரம் இது. ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருப்பதில் எங்கே தவறு நடக்கிறது என்பதையும் இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

8 பில்லியனை நோக்கி விரைந்து நடைபோடும் மனித குலம் எண்ணிப் பார்த்துப் பெருமைப்பட வேண்டிய தருணங்களை அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவ முன்னேற்றம், நீண்ட ஆயுள், பிரசவத்தில் ஏற்படும் தாய்சேய் மரணங்கள் வெகுவாய்க் குறைந்திருப்பது ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் வெவ்வேறானவர் என்பதைக் கொண்டாட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் உலக நிறுவனத் தலைமைச் செயலாளர்.

1950 தொடக்கம் உலக மக்கள்தொகை வளர்ச்சி அதன் மெதுவான வேகத்தை காண்பிப்பதாக ஐ.நா பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகை 2030இல் 8.5 பில்லியனாகவும், 2050 இல் 9.7 பில்லியனாகவும் 2080களில் அதன் உச்சமாக 10.4 பில்லியனாகவும் இருக்கும் என்றும் அதன் பின்னர் 2100 வரை அந்த நிலை நிலைத்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...