24 65fe9e9e3ba79
உலகம்செய்திகள்

உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா? அந்த நபரின் சொத்து மதிப்பு!

Share

உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா? அந்த நபரின் சொத்து மதிப்பு!

உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் உலகின் பணக்கார அரசியல்வாதி ஆவார்.

உலகின் முதல் பணக்காரர் யார்? இரண்டாவது பணக்காரர் யார்? அவரின் சொத்து மதிப்பு மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும் நம்மில் பெரும்பாலானோர் ஆர்வமாக இருப்போம்.

ஆனால் என்றாவது உலகின் பணக்கார அரசியல்வாதி யார் என்று யோசித்து இருப்போமா! இந்த எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்து இருப்போம்.

அறிக்கைகளின் படி, உலகின் பணக்கார அரசியல்வாதி வேறு யாரும் இல்லை, உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிட்டத்தட்ட $200 பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு அதிபதி (அதாவது சுமார் Rs 16,71,877 கோடி ரூபாய்) ஆவார் என்று தரவுகள் கூறுகின்றன.

இவற்றில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருட சம்பளம் $140,000 டொலராகும் (அதாவது Rs 1 கோடி).

புடினுக்கு சொந்தமாக ஆடம்பரத்தின் எடுத்துக்காட்டாக அவரது கருங்கடம் மாளிக்கை உள்ளது, இதற்கு “நாட்டு குடிசை”(Country Cottage) என்று புடின் பெயரிட்டுள்ளார்.

இது தவிர 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 19 வீடுகள், ‘தி ஃப்ளையிங் கிரெம்ளின்’(The Flying Kremlin) என்று அழைக்கப்படும் 716 மில்லியன் டொலர் மதிப்புடைய சொகுசு விமானம் உள்ளது.

அத்துடன் புடினுக்கு சொந்தமாக 700 மில்லியன் டொலர் மதிப்பிலான “Scheherazade” என்ற சொகுசு கப்பலும் உள்ளது.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...