14 37
உலகம்செய்திகள்

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் வெளியேறிய அமெரிக்கா: ட்ரம்பின் முடிவு

Share

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் வெளியேறிய அமெரிக்கா: ட்ரம்பின் முடிவு

பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து வெளியேற மீண்டும் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பல முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.

அவற்றில், பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணமும் ஒன்று.

பாரிஸ் ஒப்பந்தம் என்பது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குச் சட்டப்பூர்வமாக கையொப்பமிட்டவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

2015 ஆம் ஆண்டு முதல் முறையாக, புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தவும் அதன் தாக்கங்களை நிவர்த்தி செய்யவும் ஒரு பெரிய கூட்டு முயற்சிக்கு அரசாங்கங்கள் கூட்டாக ஒப்புக்கொண்டன.

ஆனால், ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

2021ஆம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்கா மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைந்தது.

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்ற சிற்து நேரத்திலேயே, மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...