tamilni 333 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் 22 பேரை காவுகொண்ட துப்பாக்கி சூடு சம்பவம்

Share

அமெரிக்காவில் 22 பேரை காவுகொண்ட துப்பாக்கி சூடு சம்பவம்

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 22 பேர் உயிரிழந்ததோடு 60 பேர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய மர்ம நபரான ராபர்ட் கார்டு கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, சுடுவதற்கு தயாராக இருக்கும் காட்சியும் அந்த நபரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

நகரின் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளமையினால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி பொலிஸார் நேற்றிரவு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

“துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரான ராபர்ட் கார்டு என்பவரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

அந்த நபர் ஆயுதங்களுடன் இருக்கலாம். ஆபத்து நிறைந்தவர் என்றும் தெரிகிறது. அவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்”என தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...