உலகம்செய்திகள்

உக்ரைன் ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள்! புடினுக்கு அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி

Share

உக்ரைன் ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள்! புடினுக்கு அழுத்தம் கொடுத்த ஜனாதிபதி

உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது அத்தியாவசியமானது என்பதுடன் ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிக்கும் அவசர தீர்வு எனவும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மேற்கத்திய நாடுகள் தங்களது வாக்குறுதியை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ள புடின், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாக தானியங்களை வழங்க ஊறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கருங்கடல் பாதையூடாக தானியங்களை வாங்கும் முக்கியமான நாடு எகிப்து. ஆனால் தற்போது உணவு பண்டங்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது மேற்கத்திய நாடுகளின் கொள்கை தவறுகளின் விளைவாகும் என குறிப்பிட்டுள்ள புடின்,

உக்ரைனுடனான போருக்கு முந்தையது இந்த விவகாரம் என்றார். உக்ரைன் தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர், ரஷ்யா தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

உக்ரேனிய துறைமுகங்கள் மற்றும் தானிய கிடங்குகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுவீசி ஆயிரக்கணக்கான டன் தானியங்களை அழித்துள்ளது. மேலும், ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட வழிவகுத்தது.

இதனால் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் இருந்த 20 மில்லியன் டன் தானியங்கள் சிக்கிக்கொண்டது. இது உலகமெங்கும் உணவு விலைகளை உயர்த்தியது, மேலும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தானிய பற்றாக்குறையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...