24 6612f6f466f5e
உலகம்செய்திகள்

3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று வழங்க உள்ள வாய்ப்பு

Share

3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று வழங்க உள்ள வாய்ப்பு

இந்தியா(India) உள்ளிட்ட 3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டுகள் உதவித்தொகையை வழங்கவுள்ளதாக பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் பொறியியல் முதுகலை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபா இந்திய பணத்தை கல்வி உதவித்தொகையாக வழங்குவதாக உள்ளூர் ஸ்ட்ராத்திகல்ட் பல்கலைக்கழகம் (University of Strathclyde) அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், மலேசியா மற்றும் தாய்லாந்து மாணவர்களுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பொறியியல் பிரிவில் ஓராண்டு முதுகலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இந்தியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டை(Passport) வைத்திருப்பதுடன் மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...