24 6612f6f466f5e
உலகம்செய்திகள்

3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று வழங்க உள்ள வாய்ப்பு

Share

3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று வழங்க உள்ள வாய்ப்பு

இந்தியா(India) உள்ளிட்ட 3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டுகள் உதவித்தொகையை வழங்கவுள்ளதாக பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் பொறியியல் முதுகலை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபா இந்திய பணத்தை கல்வி உதவித்தொகையாக வழங்குவதாக உள்ளூர் ஸ்ட்ராத்திகல்ட் பல்கலைக்கழகம் (University of Strathclyde) அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், மலேசியா மற்றும் தாய்லாந்து மாணவர்களுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பொறியியல் பிரிவில் ஓராண்டு முதுகலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இந்தியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டை(Passport) வைத்திருப்பதுடன் மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...