1264996 cockpit
உலகம்செய்திகள்

இரண்டு இந்திய விமானிகள் மரணம்: சோகத்தை ஏற்படுத்தியுள்ள தகவல்

Share

கடந்த இரண்டு நாட்களில், இந்திய விமானிகள் இருவர் உயிரிழந்த விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

நேற்று முன்தினம், வியாழக்கிழமை, நாக்பூரிலிருந்து புனே நோக்கிச் செல்லும் விமானத்தின் விமானியாகிய கேப்டன் மனோஜ் சுப்ரமணியம் (40), விமானத்தில் ஏறச்செலும்போது நிலைகுலைந்து விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையன்று, டெல்லியிலிருந்து தோஹா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றில் கூடுதல் விமானப் பணியாளராக பயணித்துக்கொண்டிருந்த மற்றொரு விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அவரும் உயிரிழந்துவிட்டார். இரண்டு நாட்களில், இந்திய விமானிகள் இருவர் உயிரிழந்த விடயம் சோகத்தை உருவாக்கியுள்ள நிலையில், இந்த தகவல்களை விமான போக்குவரத்துத்துறை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, மியாமியிலிருந்து சிலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியான Ivan Andaur (56) என்பவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கழிவறையிலேயே அவர் நிலைகுலைந்து விழுந்து இறந்துவிட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...