அகதிகள் படகில் ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த பிரபலம்
உலகம்செய்திகள்

அகதிகள் படகில் ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த பிரபலம்

Share

அகதிகள் படகில் ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த பிரபலம்

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பாடகர் ஒருவர் சட்டவிரோதமாக இத்தாலியில் புலம்பெயர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சொல்லிசை பாடகர்
துனிசியாவின் பிரபல சொல்லிசை பாடகரான ஜூனியர் ஹசன் என்பவரே மிக ஆபத்தான படகு யாத்திரையை முன்னெடுத்து இத்தாலியின் சிசிலியில் கடந்த வாரம் புலம்பெயர்ந்துள்ளார்.

ஜூனியர் ஹசனின் பாடல்கள் youtube சேனல் பக்கத்தில் சுமார் 15 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது சொந்த ஊரான சோஸ்ஸி பகுதியிலிருந்து புலம்பெயர்ந்த குழுவினருடன் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு தெற்கு இத்தாலிய நகரமான பலேர்மோவை அடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, புலம்பெயர் மக்களுடன் சிறிய படகு ஒன்றில் பாடகர் ஹசன் காணப்படுவதை காணொளியாக பதிவு செய்து சமூக ஊடக பக்கத்தில் சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால் அந்த காட்சிகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மோசமான பொருளாதார நெருக்கடி
துனிசியா நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களை வெளிநாடுகளுக்கு புலம்பெயர வைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், துனிசிய கால்பந்து அணி நிர்வாகம் ஒன்று அதன் 32 வீரர்கள் ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்ததை அடுத்து அதன் செயல்பாடுகளை நிறுத்தியது.

இதனிடையே, மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முயலும் ஆப்பிரிக்க புலம்பெயர் மக்களின் முக்கியப் புறப்பாடும் பகுதியாக துனிசியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....