tamilni 257 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

Share

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதோடு பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் நேற்று (20.10.2023) பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இருவரை விடுதலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த தாய் மற்றும் இளம் வயது மகள் என கூறியுள்ளது.

மேலும், இருவரிடமும் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஹமாஸ் பிணைக்கைதிகள் இருவரை விடுதலை செய்த போதிலும், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய கத்தார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...