16 12
உலகம்செய்திகள்

சங்காய் மாநாட்டை முன்னிட்டு பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

Share

சங்காய் மாநாட்டை முன்னிட்டு பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்கள் கூட்டத்துக்காக, சீனப் பிரதமர் லி கியாங் பாகிஸ்தானுக்கு வந்தடைந்த நிலையில், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பெரும்பாலும் நகரம் பூட்டப்பட்ட நிலையில் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், கடந்த 11 ஆண்டுகளில் சீனப் பிரதமர் ஒருவர், பாகிஸ்தானுக்குச் செல்வது இதுவே முதல் தடவையாகும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சங்காய் மாநாட்டை முன்னிட்டு பாகிஸ்தானிய அரசாங்கம் இஸ்லாமாபாத்தில் மூன்று நாள் பொது விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், பாடசலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

அதேநேரம், பெருமளவிலான பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் அண்மையில் இரண்டு சீன பொறியியலாளர்கள் கொல்லப்பட்டதோடு 21 சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, நாட்டில் சீன நாட்டவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தானின் கவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார இன்று தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா, ஈரான் மற்றும் ரஸ்யா உள்ளிட்ட ஒன்பது முழு உறுப்பினர்களை உள்ளடக்கிய 23ஆவது சங்காய் அமைப்பின் கூட்டம் இஸ்லாமாபாத்தில் செவ்வாய் (15) மற்றும் புதன்கிழமைகளில் (16) நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில், சீனா, ரஸ்யா, பெலாரஸ், கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் மற்றும் ஈரானின் முதல் துணைத் தலைவர் ஆகியோரும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சரும் பங்கேற்கவுள்ளனர்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...