15 13
இலங்கைசெய்திகள்

சீனர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சீனத் தூதரகத்தின் அறிக்கை வெளியானது

Share

சீனர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சீனத் தூதரகத்தின் அறிக்கை வெளியானது

இலங்கையில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, சீன நாட்டவர்கள் பலர் அண்மையில் கைது செய்யப்பட்ட சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் அதேநேரம், அவர்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு, இலங்கை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட சீன தூதரகம், இந்த சம்பவம், இரண்டு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் இதுபோன்ற சம்பவங்களின் நிகழ்வு 2021ஆம் ஆண்டு முதல் குறைக்கப்பட்டுள்ளது என்றும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராட மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளுடன், பலனளிக்கும் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

உலகமயமாக்கலின் சகாப்தத்தில், எந்த நாடும் தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியாது. அந்த வகையில் சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவைக் கொண்டிருக்கின்றன.

அத்துடன், இரண்டு நாட்டு மக்களுக்கும் நன்மைகளை கொண்டு வருவதற்கு, இரண்டு நாடுகளும் எப்போதும் நெருங்கிய நிலையில் செயற்பட்டு வருகின்றன என்றும் சீன தூதரகம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...