23 652219885a9de
உலகம்செய்திகள்

தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து; சிக்கிய 13 பேர் பலி!

Share

தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து; சிக்கிய 13 பேர் பலி!

இந்தியாவில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளி பட்டாசுகடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

வழமைபோன்று வேலை செய்துக்கொண்டிருக்கும் போது திடீரென பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

பட்டாசு கடைக்குள் இருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டு, ஒரு சிலர் சிறிய காயத்துடன் வெளியே ஓடி உயிர் தப்பிய நிலையில், உள்ள சிக்கிய 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தின் போது, கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்து சேதம் அடைந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...