5 7 scaled
உலகம்செய்திகள்

இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது… சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த உள்துறைச் செயலர்

Share

இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது… சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த உள்துறைச் செயலர்

சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிக்கொண்டேயிருந்ததால் பதவியை இழந்த பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

புலம்பெயர் பின்னணி கொண்டவராக இருந்த நிலையிலும், இந்திய வம்சாவளியினரான சுவெல்லா, புலம்பெயர்தலுக்கெதிராக பேசிக்கொண்டே இருந்தார், வீடற்றவர்களை மோசமாக விமர்சித்தார், பாலஸ்தீன ஆதரவு பேரணிகளின்போது பொலிசார் பாரபட்சமாக நடந்துகொள்வதாக கட்டுரை எழுதினார். அவரது கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கிக்கொண்டே இருந்தன.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியிலும் அவருக்கு எதிர்ப்பு வலுக்கத் துவங்கியது. ஏன் இன்னும் அவரை பிரதமர் ரிஷி பதவிநீக்கம் செய்யவில்லை என கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று சுவெல்லாவை அதிரடியாக பதவிநீக்கம் செய்தார் பிரதமர் ரிஷி சுனக்.

பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா, உள்துறைச்செயலராக பணி புரிந்தது என் வாழ்வில் மிகப்பெரிய பாக்கியம் என்று கூறியுள்ளார்.

அத்துடன் நிற்காமல், நான் இன்னும் நிறைய பேசவேண்டியுள்ளது. நேரம் வரும்போது பேசுவேன் என்றும் கூறியுள்ளார் சுவெல்லா.

அவர் என்ன பேசப்போகிறார் என்பதும், அவர் பேசினாலும், யார் அவர் பேசுவதை காதுகொடுத்துக் கேட்கப்போகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

எப்படியும், எதிர்காலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுவெல்லா, பதவிநீக்கம் செய்யப்பட்டது மோசமான முடிவுதான் என்பதில் சந்தேகமில்லை.

Share
தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...