24 18
உலகம்செய்திகள்

சூடானில் RSF அமைப்பு நடத்திய தாக்குதலில் 124 பேர் பலி

Share

சூடானில் RSF அமைப்பு நடத்திய தாக்குதலில் 124 பேர் பலி

சூடான் (Sudan) நாட்டின் RSF அமைப்பு மேற்கொண்ட படுகொலை தாக்குதலில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

சூடானின் தலைநகர் கார்தூமிற்கு தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் குறித்த அமைப்பு ஒரு கொடூரமான படுகொலையை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த தாக்கில் குறைந்தது 124 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 150 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரில் மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

துணை இராணுவக் குழுவான RSF அமைப்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சூடான் ஆயுதப் படைகளுடன் (SAF) கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றது.

 

இந்நிலையில், இரு தரப்புகளும் குடிமக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவற்றில், சட்டவிரோத கொலைகள், இடம்பெயர்வு மற்றும் கட்டமைப்புகளை அழித்தல் ஆகியவை அடங்கும்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...